7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - 3 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை

 
ஹ்

தொடர் கனமழையினால் ஏழு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மூன்று மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   செங்கல்பட்டு, விழுப்புரம் ,காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ர்

தமிழ்நாட்டில் கடந்த 29ஆம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து முடங்கி இருக்கிறது.  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. 

ஹ்

 இன்றைக்கும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   இதே போல் ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.  நேற்றைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.  செங்கல்பட்டு விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களிலும் இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.