29 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 
tm

கனமழையின் காரணமாக 29 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, தேனி, திருச்சி, திண்டுக்கல், கரூர், சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனழையின் காரணமாக  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதில், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . திருப்பத்தூர் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

t

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது .  கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை,  மிக கனமழையும் பெய்து வருகிறது.  இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.    அதேபோல் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. 

r

 சென்னை, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 15 மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் , மிக கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ள நிலையில், 29 மாவட்டங்களுக்கு  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.