16 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும்

 
r

 தமிழ்நாடு, புதுச்சேரியில் 16 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

cr

 திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் புதுக்கோட்டை, தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்,  மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது .

 வரும் ஏழாம் தேதி மற்றும் எட்டாம் தேதி ஆகிய இரண்டு தினங்களும் தமிழ்நாட்டில் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்றும்,  சென்னையில் இன்றைய தினம் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.   சில இடங்களில் இடி மின்னலுடன் திடீர் மழை பெய்யும் என்று அறிவித்திருக்கிறது.

 தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும் என்பதால் மீனவர்கள் வரும் எட்டாம் தேதி அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது வானிலை ஆயுவு மையம்.