சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா : டிச.5ல் சர்வதேச மருத்துவ மாநாடு.. - அமைச்சர் மா.சு அறிவிப்பு..

 
ma Subramanian


பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமான சர்வதேச மருத்துவ மாநாடு, வரும் 05-ஆம் தேதி முதல் 08-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ்  மகளிர் கல்லூரியில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா சிறப்பு பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், துறை செயலாளர் செந்தில்குமார்,  பொதுசுகாதாரதுறை இயக்குனர் செல்வவிநாயகம், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

International Medical Conference - எத்திராஜ் கல்லூரி

எஞ்சாயி எஞ்சாமி பாடல் புகழ் இசை கலைஞர் அறிவு பொது சுகாதார துறை நூற்றாண்டு விழாவிற்காக எழுதி, இசையமைத்து பாடிய பாடலை அமைச்சர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “நூற்றாண்டுவிழா விழா கொண்டாடும் வேளையில், பொது சுகாதாரத் துறை நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களை கண்டுள்ளது என்றார். போலியோ காலரா உள்ளிட்ட பல நோய்களை சிறப்பாக கையாண்டு பொது சுகாதார துறை ஒழித்துள்ளதையும் தற்போது கொரோனாவையும் இந்த துறை சிறப்பாக கையாண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மா.சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு  நிபந்தனை முன் ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம்!

பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் சர்வதேச மருத்துவ மாநாடாக கொண்டாடப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார். இதில் பங்கேற்க 2000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதுவரை பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மற்ற நாட்டின் சர்வதேச மருத்துவ மாநாட்டை விட தமிழ்நாடு பொது சுகாதார துறை நடத்தும் இந்த மாநாட்டிற்கு அதிக மருத்துவர்கள் வருவதாக பதிவு செய்ததில் இருந்தே, இந்த துறையின் தரத்தை புரிந்து கொள்ளலாம்” என்று அமைச்சர் தெரிவித்தார்.