செஸ் போட்டியில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்கள், விமானத்தில் பயணம் - தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு..

 
செஸ் போட்டியில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்கள், விமானத்தில் பயணம் - தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு..

 செஸ் போட்டியில்  வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள், சிறப்பு விமானம்  மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த சிறப்பு விமானத்தை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னையில்  நாளை  செஸ் ஒலிம்பியாட் போட்டி  தொடங்கவுள்ள நிலையில், செஸ் விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு  பள்ளி,  வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில்  வெற்றிபெறும் மாணவர்கள் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை  தெரிவித்திருந்தது.    1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்  கூறப்பட்டிருந்தது.  

செஸ் போட்டியில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்கள், விமானத்தில் பயணம் - தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு..

அதன்படி  தமிழ்நாடு முழுவதில்  இருந்தும் மாநில அளவிலான சதுரங்கப்போட்டியில் பங்கேற்று,  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைக் காணவும், சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாடவும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.  இதையடுத்து  வெற்றிபெற்ற 152 அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விமானத்தில்  பயணம் செய்யவும் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.  

செஸ் போட்டியில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்கள், விமானத்தில் பயணம் - தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு..

அதன்படி அந்த மாணவர்கள் அனைவரும்  இன்று(ஜூலை 27) பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை விமானநிலையம் அழைத்துவரப்பட்டு,  பின்னர் சிறப்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து பெங்களூரு அழைத்துச்செல்லப்பட்டனர். பள்ளி மாணவர்கள் செல்லும் சிறப்பு விமானத்தை சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர்கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இந்த விமானம் மாலை 4.30 மணியளவில் மீண்டும் சென்னை விமானநிலையத்திற்கு வந்து சேர்கிறது.  இந்த மாணவர்களுக்கு  விமானத்திற்குள்ளேயும்  சதுரங்கப் போட்டி விளையாடிக்கொண்டே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விளையாட்டுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு அமைச்சர்கள் விருது வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.