திமுக பேச்சாளர் மீது போலீசில் ஆளுநர் மாளிகை புகார்

 
tn

திமுக பேச்சாளர் மீது காவல்துறையில் ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது.  ஆளுநர் பற்றி அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது போலீசில் ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது.  விருகம்பாக்கத்தில் நடந்த விழாவில் ஆளுநர் பற்றி அவதூறாக மிரட்டல் விடும் தொனியில் பேசியதாக சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன்,  தபால் மூலம் ஆளுநர் மாளிகை துணைச்செயலாளர் பிரசன்னா ராமசாமி புகார் அளித்துள்ளார். 

tn

கடந்த 9ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடரின் தொடக்க நாளில் ஆளுநர் ரவி நிகழ்த்திய உரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து  ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் ஆளுநர் ரவி கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.  இந்த நிகழ்வு  தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்த சூழலில் ஆளுநர் ரவி உரை நிகழ்த்திய போது பேப்பரில் எழுதிக் கொடுத்தபடி படித்திருந்தால்,  அவர் காலில் பூ போட்டு அனுப்பி இருப்போம்.  ஆனால்  இந்தியாவுக்கு சட்டத்தை எழுதிக் கொடுத்த எங்கள் முப்பாட்டன் அம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டேன் என்று சொன்னால் கவர்னரை செருப்பால் அடிக்கும் உரிமை எனக்கு உள்ளது.  அரசியலமைப்பு சட்டத்தை சொல்லித்தானே பதவி ஏற்றார் என்று திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

tn

இதன் காரணமாக ஆளுநர் ரவி குறித்து திமுக பேச்சாளர் தகாத வார்த்தைகளை பேசி உள்ளார் என்றும் அவருடைய பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது . இதனால் அவர் மீது இந்தியன் பீனல் கோடு 124 மற்றும் 1870-இன் படி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.