தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை.. இன்றும் விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி..

 
தங்கம் விலை

தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வரும் தங்கம் விலை, இன்றும் ஏற்றம் கண்டிருக்கிறது.  

தங்கம் விலையில்  சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ்வது வாடிக்கையான ஒன்றுதான்.  இந்த நிலையில் இம்மாத  தொடக்கத்தில் மத்திய அரசு, தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதன்பிறகு தொடர்ந்து  தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது.  இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட ஒரு வார காலத்தில்  மட்டும், தங்கம் விலை சவரனுக்கு  ரூ. 1000  வரை அதிகரித்தது.  தமிழகத்தை பொறுத்தவரை ஆடி மாதத்தில் எந்த ஒரு சுப காரியங்களும் நடத்தப்படாது. ஆனால் அடுத்து வரும் ஆவணி மாதத்தில் ஏராளமான முகூர்த்த நாட்கள் உள்ளன. அதனையொட்டியே தங்கம் விலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின்  விலை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏறுமுகத்தில் தான் இருந்து வருகிறது.  நேற்று முன்தினம்  சவரனுக்கு  ரூ.256 உயர்ந்து, சவரன் ரூ.38,136க்கு விற்கப்பட்டது.   தொடர்ந்து நேற்றைய தினம் தங்கம் விலை  சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38, 440க்கும் விற்பனை செய்யப்பட்டது.  தொடர்ச்சியாக கடந்த 7 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,400 க்கும் மேல்  அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம்விலை   உயர்வைக் கண்டிருக்கிறது.  

தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை.. இன்றும் விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி..

அதன்படி சென்னையில் இன்று  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து , ஒரு கிராம் 4,815-க்கு விற்கப்படுகிறது.  அதேபோல் சவரனுக்கு  ரூ. 80 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38 ஆயிரத்து 520 ஆக  விற்பனையாகிறது.  இதேபோல்  தொடந்து  இன்றும்  வெள்ளி விலையும்  உயர்வைக் கண்டிருக்கிறது.  சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி 62 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையான நிலையில்,  இன்று 1 ரூபாய்  40 காசுகள் உயர்ந்துள்ளது.  சில்லறை விற்பனையில்  , ஒரு  கிராம் வெள்ளி   ரூ.63.70 ஆகவும்,  ஒரு கிலோ வெள்ளி 63,700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.