கோகுல்ராஜ் கொலை வழக்கு புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு.. சுவாதி மீண்டும் ஆஜராக உத்தரவு..

 
 கோகுல்ராஜ் கொலை வழக்கு புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு.. சுவாதி மீண்டும் ஆஜராக உத்தரவு.. 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியை புதன்கிழமை மீண்டும் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

பொறியாளர் கோகுல்ராஜ் கொலை  வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவரிடம்  நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர்.  நீதிபதிகளின் பெரும்பாலான கேள்விகளுக்கு  சுவாதி  ‘தெரியாது’ என்றே பதிலையே அளித்தார்.  சம்பவம் நடந்த 23.05. 2015 அன்று காலை கோகுல்ராஜை பார்த்தீர்களா என்கிற கேள்விக்கு ,  ‘இல்லை. நான் அவரை பார்க்கவில்லை’ என்று கூறினார்.   இதையடுத்து கோகுல்ராஜுடன் அவர் கோயிலுக்கு வந்தது, கோயிலை விட்டு வெளியே வந்தது உள்ளிட்ட காட்சிகளின் சிசிடிவி பதிவுகளை காட்டி கேட்டபோது,  டிவியில் உள்ளது கோகுல்ராஜ்தான். ஆனால் அவருடன் செல்லும் பெண் நான் இல்லை’ என்று   மீண்டும், மீண்டும் கூறினார்.

 கோகுல்ராஜ் கொலை வழக்கு புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு.. சுவாதி மீண்டும் ஆஜராக உத்தரவு.. 

இதையடுத்து நீதிபதிகள் அவரது முகம் தெளிவாக  பதிவாகியிருந்த குளோஸ் அப் காட்சிகளை போட்டு காட்டினர். அதை பார்த்ததும் சுவாதி  கண்ணீர் விட்டு கதறினார்.  அப்போது நீதிபதிகள் ‘இது நீங்கள் இல்லையா? உங்களையே உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா? இந்த வழக்கின் முக்கிய சாட்சி நீங்கள்தான். நீங்கள் உண்மைகளை கூற வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு போலீஸ் பாதுகாப்புடன் இங்கு அழைத்து வரப்பட்டுள்ளீர்கள். உண்மைகளை கூறத் தவறினாலோ, பொய்யான தகவல்களை தெரிவித்தாலோ மீண்டும், மீண்டும் குறுக்கு விசாரணைக்காக இந்த நீதிமன்றத்திற்கு நீங்கள் வர வேண்டியது நேரிடும்’ என்று எச்சரித்தனர்.  

இதன் பின்னர் 15 நிமிடம் இடைவெளி விட்ட நீதிபதிகள், மீண்டும் விசாரணையை தொடங்கிய போது  தனக்கு மயக்கம் வருவதாக சுவாதி கூறியதையடுத்து ,  நீதிமன்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர்  மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போது , ‘நீங்கள் பேசியதாக கூறப்படும் ஆடியோவை சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அதில் உண்மை தெரிந்துவிடும்’ என கோபத்துடன் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை கேட்டதும் சுவாதி கண்ணீர் விட்டு கதறியதால் நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து சுவாதியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை  நீதிபதிகள் எழுப்பினர்.

 கோகுல்ராஜ் கொலை வழக்கு புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு.. சுவாதி மீண்டும் ஆஜராக உத்தரவு.. 

அப்போது, ‘நீதிமன்றம் விளையாட்டு மைதானமா?, சத்ய பிரமாணம் எடுத்தபின் பொய் சாட்சி கூறுவது ஏன்? வீடியோவில் உங்களையே பார்த்து தெரியாது என்கிறீர்கள்.  எவ்வளவு நாட்கள் உண்மையை மறைக்க முடியும்? குழந்தைகள் மீது சத்தியம் செய்து விட்டு, உங்களைப் பார்த்து நீங்களே தெரியாது என சொன்னால், இந்த நீதிமன்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? உண்மையைக் கூறுவதால், ஏதேனும் பிரச்சனை எழுமெனில் அவற்றையாது சொல்லுங்கள்’ என்று காட்டமாக தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த சுவாதி எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டேன், வேறு எதுவும் தெரியாது என்று  என கூறினார்.

பின்னர் நீதிபதிகள்,  கீழமை நீதிமன்றத்தைப் போல, இந்த நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது என்றும், உண்மையை மறைத்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழல் வரும் என்றும் எச்சரித்தனர். மேலும், உண்மை என்றைக்கானாலும் சுடும்  என தெரிவித்த நீதிபதிகள்  வழக்கு விசாரணையை அடுத்தவாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.  மேலும் அன்றைய தினம் சுவாதி மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.  புதன்கிழமை ஆஜராகும் போது இதே நிலை நீடித்தால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கபப்டும் என்றும் எச்சரித்தனர்.