இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - கணவர் கைது

 
i

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர் .  திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குள்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் கணவனிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறை நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுரு.   அவரது மனைவி இந்துமதி.   திருமணமாகி இவர்களுக்கு நாலு வருடங்கள் ஆகிறது.  கணவர் ராஜகுரு அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்வதால் மனம் உடைந்து போயிருந்திருக்கிறார் இந்துமதி.  இதனால் கணவன் ராஜகுருவிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.   அதன் பின்னர் ராஜகுரு, தனது மாமியார் வீட்டிற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.

r

 இந்த நிலையில் திடீரென்று இந்துமதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.   தகவல் அறிந்த போலீசார் இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது கனவர் ராஜகுரு மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

 இதற்கிடையில் இந்துமதியின் உறவினர்களும், பெற்றோரும் ராஜகுரு அவரது குடும்பத்தினரை கைது செய்ய கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .  அதன் பின்னர் இந்துமதியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் ராஜகுருவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.   இந்த சம்பவம் ஆடுதுறை பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.