ஆண் நண்பர் பேசுவதை தவிர்த்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
வளசரவாக்கத்தில் ஆண் நண்பர் பேசுவதை தவிர்த்து வந்தால் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வளசரவாக்கம், பழனியப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணராவ்(53), சினிமா துறையில் கேமரா மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் அரிதா ராஜேஸ்வரி(25), பட்டப்படிப்பு முடித்த இவர் வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்த நிலையில் இரவு தனது அறைக்குள் சென்ற அரிதா ராஜேஸ்வரி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது பெற்றோர் உள்ளே சென்று பார்த்தபோது அரிதா ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவல் அறிந்து வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தலைமையில் விரைந்து வந்த போலீசார் இறந்து போன அரிதாராஜேஷ்வரி உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அரிதா ராஜேஸ்வரி கோடம்பாக்கத்தை சேர்ந்த மதுமோகன் என்பவரிடம் நண்பராக பழகி வந்ததாகவும் மதுமோகனுக்கு அதிகமான கடன் பிரச்சினை இருந்து வந்ததால் கடந்த சில வாரங்களாக அரிதா ராஜேஸ்வரிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் படித்து விட்டு அரசு வேலை சம்பந்தமான தேர்வு எழுதுமாறு கூறியதாகவும் இதனால் மிகுந்த மன உளைச்சலில் அரிதாராஜேஷ்வரி இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும், அரசு வேலைக்கு தேர்வுகள் அதிகமாக எழுதி சோர்ந்து விட்டதாகவும் கடிதம் எழுதி வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். எனவே அரிதா ராஜேஸ்வரியின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து வளசரவாக்கம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில் அவரது நண்பரிடம் விசாரணை செய்ய வேண்டும் என அவரது தந்தை புகார் தெரிவித்துள்ளார். இது குறித்தும் வளசரவாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்