அறைகளை ஆய்வு செய்து முடித்த சிபிசிஐடி போலீசாரின் அடுத்தகட்ட விசாரணை
அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த சிபிசிஐடி போலீசாரின் இன்றைய விசாரணை நிறைவு பெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலையில் 8. 15 மணிக்கு சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் வெங்கடேசன், ராஜ பூபதி தலைமையில் 20 போலீசார் சென்றார்கள். ஒவ்வொரு அறையாக சென்று அவர்கள் ஆய்வு நடத்தி உள்ளனர். ஒவ்வொரு அறையில் இருந்தும் ஆவணங்கள் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு இருப்பது பற்றி கணக்கு எடுத்துள்ளார்கள் .
அறைகள் சூறையாடப்பட்டு கிடக்கும் விதத்தினையும் சிபிசிஐடி போலீஸ் பதிவு செய்தனர். ஆய்வு செய்யும் காட்சிகள் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது போட்டோவும் எடுக்கப்பட்டுள்ளது.
சில அறைகளில் சிபிசிஐடி போலீசார் நீண்ட நேரம் ஆய்வு நடத்தியுள்ளனர். சில அறைகளில் ஏற்கனவே என்னென்ன பொருட்கள் இருந்தன என்பது குறித்து கேட்டறிந்து உள்ள கொண்டுள்ளார்கள். சில அறைகளில் அதிமுக அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. இதற்கு முன்பு தேர்தல் சமயத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், அறிக்கைகள் அனைத்தும் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்து மாயமாகிவிட்டது என்று நிர்வாகிகள் சோதனையின் போது சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
சிபிசிஐடி போலீசார் சோதனையின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உடன் இருந்துள்ளார். சூறையாடப்பட்ட அறைகளில் காணாமல் போன பொருட்கள் பற்றி அவர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு செய்துள்ளனர் . இந்த சோதனையின் போது வெளியில் இருந்து யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
அறைகளை ஆய்வு செய்து முடித்த பின்னர் அடுத்தகட்ட விசாரணையையும் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு உள்ளனர். அதிமுக தலைமை கழக மேலாளர் மகாலிங்கம் உட்பட சிலரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளார்கள். அதிமுக நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் பின்னர் இன்று விசாரணையை நிறைவு செய்துள்ளனர்.
அதிமுக மோதல் சம்பவம் தொடர்பான பதிவான சிசிடிவி காட்சிகள் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வரும் சிபிசிஐடி போலீசார், மோதல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்