சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்களின் விலை அதிரடி உயர்வு

 
Fruits

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்களில் விலை அதிகரித்துள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 

சென்னை கோயம்பேடு மார்க்கெட் சென்னை மக்களின் காய்கறி, பழம், பூ தேவையில் முக்கிய பங்காற்றி வருகிறது. இங்கிருந்து தான் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை சப்ளை செய்யப்படுகிறது. வரத்து அதிகரிக்கும் போது விலை குறைவதும், வரத்து குறையும் போது விலை அதிகரிப்பதும் வழக்கமான ஒன்று தான். இந்நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பழங்களின் தேவை பெருமளவில் அதிகரித்துள்ளதால் பழங்களின் விலை அதிகரித்துள்ளது. 

fruits

கிலோவுக்கு பத்து ரூபாய் தொடங்கி 150 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு பழச்சந்தையில் கடந்த வாரம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மாதுளை தற்போது 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சாத்துக்குடி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் திராட்சை, பப்பாளி, ஆரஞ்சு பழங்களின் விலை கிலோவிற்கு 20 முதல் 40 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பழங்களின் வரத்து குறைவாக இருப்பதும் கோடைக்காலம் என்பதால் பழங்களின் தேவை அதிகமாக இருப்பதும் விலை ஏற்றத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.