பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவை காண கட்டணமில்லா முன்பதிவு வசதி

 
palani

பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழாவை காண கட்டணமில்லா முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

எம்பெருமான் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக பழனி பழனி முருகன் கோவில் விளங்கி வருகிறது. உலக புகழ்பெற்ற இந்த கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வருகிற ஜனவரி 27ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பழனி முருகன் கோயிலில் ஜனவரி 27-ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழாவை காண கட்டணமில்லா முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்துள்ளவர்களில் குழுக்கள் முறையில் 2,000 பேர் தேர்வு செய்யப்பட்டு குடமுழுக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜனவரி 18 முதல் 20 வரை www.palani murugan.hrce.tn.gov, மற்றும் www.hrce tn.gov.in என்ற இணையதளத்த்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.