நீட் தேர்வுக்கு 412 மையங்களில் இலவச பயிற்சி வகுப்புகள்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 
n

நடப்பாண்டிற்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்குவது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது . 412 நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையங்களை ஏற்படுத்தி அதன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கின்றது.

n

 நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடங்குவது குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.  அதன்படி போட்டி தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு 3வது வார சனிக்கிழமைகளில் இருந்து ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன.

 போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற விரும்பும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒன்றியத்திற்கு அதிகபட்சம் 50 பேரும்,  11ஆம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒன்றியத்திற்கு அதிகபட்சம் 20 பேரும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே முந்தைய ஆண்டுகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த ஆண்டு முதல் அந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.