கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு - பெற்றோர் கதறல்
கால்பந்து வீராங்கனை பிரியா(17) உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
கால் சவ்வு பிரச்சனை காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில். அதில் கால்களும் அகற்றப்பட்டன. தொடர்ந்து பிரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
சென்னை வியாசர்பாடி பகுதியினைச் சேர்ந்தவர் பிரியா. சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் கால்பந்து விளையாட்டிலும் பயிற்சி பெற்று வந்தார். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்து வந்த பிரியா, அண்மையில் பயிற்சியின்போது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது .
இதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றிருந்தர் பிரியா. அப்போது காலில் தசை பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இதை அடுத்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தசைப் பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்தார். ஆனாலும் பிரியாவுக்கு காலில் வலி குறையாமல் இருந்தது .
இதனால் சிகிச்சைக்காக அவர் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் குழு செய்த பரிசோதனையில் காலில் இருந்த தசைகள் அனைத்தும் அழுகக் கூடிய நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்ற வேண்டும். இல்லை என்றால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். பெற்ற மகளை காப்பாற்ற வேறு வழியில்லாததால் அறுவை சிகிச்சை செய்ய பெற்றோர் ஒப்புக்கொண்டனர் .
இதை அடுத்து பிரியாவின் கால்களை மருத்துவர்கள் அகற்றினர். அதன் பின்னரும் சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்திருக்கிறார்.
மருத்துவர்களின் அலட்சிய போக்கு, தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம், இப்போது உயிரையும் இழக்க காரணம் என்று பெற்றோர்கள் கதறி அழுகின்றார்கள்.