பொன்னமராவதி அருகே மீன்பிடித் திருவிழா கோலாகலம்

 
PDKT Fishing

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மைலாப்பூர் கிராமத்தில் உள்ள கோணாங்கண்மாயில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு போட்டி போட்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கமாக நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறும். ஜாதி, மதம் பாராமல் அனைவரும்  ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடைபெறும் மீன்படி திருவிழா கொரோனா பெறுந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற வில்லை. இந்நிலையில், பொன்னமராவதி அருகே மைலாப்பூர் கிராமத்தில் உள்ள கோணாங்கண்மாயில் ஊர் முக்கியஸ்தர்களால் நடு மடையில் தேங்காயை உடைத்து சூடம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர் துண்டு வீசப்பட்டு மீன்பிடிவிழா தொடங்கியது. கண்மாயில் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடி மீன் பிடிக்க தொடங்கினர். 

fishing

இந்த மீன்பிடி திருவிழாவில் கோணாங்கண்மாயில், பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த  கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர். பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள்  ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடித்தனர். அதில் மீன்பிடித்தவர்கள் கைகளுக்கு நாட்டு வகை மீன்களான கெளுத்தி,குரவை, ஜிலேபி,கெண்டை, அயிரை, கட்லா,விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. பிடித்த மீன்களுடன் மகிழ்ச்சியில் வீட்டிற்க்கு கொண்டு சென்றனர். மேலும் வீட்டுக்கு கொண்டு செல்லப்படும் மீன்களை வழிபாட்டிற்குப் பின்னர் சமைத்து உண்பதை ஐதிகமாக கொண்டுள்ளனர்.