#Breaking ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி கல்வீச்சு - அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு!!

 
tn

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 9.15 மணிக்கு கூடுகிறது.  அதே சமயம் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓ.  பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது.

admk office


அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள காலை 7  மணிக்கு தன்னுடைய இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி பிரச்சார வாகனத்தில் பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அதேசமயம் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டுள்ளார். புறப்படும் முன்பாக தலைமை கழகத்தில் தொண்டர்களை சந்திக்க உள்ளேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ள நிலையில் தலைமை கழகம் பூட்டப்பட்டுள்ளது.  இந்த சூழலில் ஓ. பன்னீர்செல்வம் தனது தொண்டர்களுடன் அதிமுக அலுவலகத்திற்கு புறப்பட்டுள்ளார்.  இதற்கு முன்பாகவே அதிமுக தலைமை அலுவலகத்தின் வாயிலில் அக்கட்சியின் தொண்டர்கள் குவிந்தனர்.

tn
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும்   இடையே அலுவலகத்தின் முன்பாக கைகலப்பு ஏற்பட்டது.  நடுரோட்டில் சண்டையிட்டு கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் , இரு தரப்பினரும் கற்களை வீசி  தாக்கி கொண்டனர். இதனால் அதிமுக தலைமை அலுவலகம் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.