ஆசைக்கு இணங்கவில்லை என்றால் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டேன்! மகளை மிரட்டிய தந்தை

 
rape

மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வெளியே கூறினால் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டேன் என மிரட்டிய தந்தையை மயிலாப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். தாயிடம் பலமுறை புகார் அளித்தும் எடுபடாத நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு எண் 1094 க்கு தைரியமாக புகார் அளித்த மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1,083 Raped Stock Photos and Images - 123RF

சென்னை மயிலாப்பூரில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் குடும்பத்தில் 17 வயதுடைய மூத்த பெண்ணிற்கு பெற்ற தந்தையே பாலியல் சீண்டல் கொடுத்து வந்துள்ளார். மகள் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதிலிருந்து தந்தை தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

மகள் வளர்ந்தபிறகு பள்ளியில் குட் டச் பேட் டச் பற்றி சொல்லிக் கொடுத்ததெல்லாம் தெரிந்தவுடன் தனது தந்தை தன்னை தவறான நோக்கத்துடன் தொடுகிறார் என்பதை மகள் புரிந்து கொண்டிருக்கிறார். அதன் பின்புதான் தாயிடம், தந்தை தன்னிடம் இரவு நேரங்களில் அத்து மீறுவதாக கூறியிருக்கிறார். ஆனால் தாய் அதை நம்ப மறுத்து உள்ளார். ஆனால் தாயிடம் கூறியது தொடர்பாக தந்தைக்கு தெரிய வந்ததால் இந்த பாலியல் சீண்டல் குறித்து வெளியே யாரிடமும் கூறினால் பள்ளிக்கு தேர்வு எழுத அனுமதிக்க மாட்டேன் என தந்தை மகளை மிரட்டி இருக்கிறார். இதனால் மகள் மிகவும் மனமுடைந்து போய் இருக்கிறார்

இறுதியில் தேர்வு எழுதிவிட்டு சைல்டு ஹெல்ப் லைன் எண்ணான 1098 க்கு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு தனக்கு நடந்து வரும் கொடுமைகளை எல்லாம் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகள்  உடனடியாக மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். இது தொடர்பாக மாணவியிடம் நடத்திய விசாரணையில் அனைத்தும் உண்மை என தெரிய வந்ததால் அவரது தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.