9மாவட்டங்களில் போலி வங்கிகள்.. சிக்கிய ரூ. 56 லட்சம்.. - எச்சரிக்கும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்..

 
9மாவட்டங்களில் போலி வங்கிகள்.. சிக்கிய ரூ. 56 லட்சம்.. - எச்சரிக்கும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்..

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் போலியான வங்கி  நடத்தி வந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.  

சென்னை உள்பட 9 மாவட்டங்களில்   போலி வங்கிகள் செயல்பட்டு வந்தது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதுகுறுத்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற பெயரில் 9 இடங்களில் போலி வங்கி நடத்தி மோசடி செய்துள்ளதாக தெரிவித்தார்.   நிஜ வங்கி போலவே டெபாசிட் செல்லான், சீல் என முழு செட்டப் உடன் இந்த் போலி வங்கிகள் செயல்பட்டதாகவும்,  சுமார் 2000 பேர் இந்த வங்கியில்  வாடிக்கையாளர்களாக இருப்பதாகவும் தெரிவித்தார்.  

9மாவட்டங்களில் போலி வங்கிகள்.. சிக்கிய ரூ. 56 லட்சம்.. - எச்சரிக்கும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்..

சென்னை, கள்ளக்குறிச்சி, சேலம், விருத்தாச்சலம், நாமக்கல், மதுரை, கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய  9 இடங்களில் போலி வங்கிகள் செயல்பட்டு வந்ததாகவும், போலி வங்கி நடத்தி மோசடி செய்தவர்களிடமிருந்து  ரூ.56 லட்சம் முடக்கப்பட்டடுள்ளதாகவும்,  போலி வங்கி நடத்தியவர்களிடம் இருந்து போலி பாஸ்புக், முத்திரைகள், கிரெடிட் கார்ட், பாஸ்போர்ட்  உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.  போலி வங்கி நடத்தி 2,000 வாடிக்கையாளர்களை சேர்த்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்தார்.  

மோசடி

சென்னையை சேர்ந்த சந்திரபோஸ் உள்ளிட்ட மோசடி கும்பலை சேர்ந்த 46 பேரை  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாகவும்  காவல் ஆணையர் விளக்கமளித்தார். கடந்த ஓராண்டாக ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் இந்த  போலி  வங்கி நடத்தி வந்துள்ளதாகவும்,  போலி வங்கி மோசடியில் சம்மந்தப்பட்டவர்கள் எத்தனை பேர் என  விசாரணை நடத்தி வருவதாகவும், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்.