அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

 
ஆர்என் ரவி

அனைவரும்  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  கேட்டுக்கொண்டுள்ளார்.  

கொரோனா

இதுகுறித்து  தமிழக  ஆளுநர்  ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் , “கோவிட் தொற்று நோய் இன்னமும் இங்கே உள்ளது என்பது நாம் அனைவரும் அறிவோம். பொதுமக்கள் பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் இறந்தும் உள்ளனர். தடுப்பூசி எடுத்துக் கொள்வதே பாதுகாப்பு ஆகும் . இந்தியா முழுவதும் தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறந்த முறையில் நடை பெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 200 கோடி அளவிலான தடுப்பூசி செலுத்தும் பணி கடந்து உள்ளது.  

பூஸ்டர் டோஸ்
தொடரும் கோவிட் தொற்றை கருத்தில் கொண்டு, நமது பாரதப் பிரதமரின் தொலை நோக்குப் பார்வை கொண்ட இந்திய அரசு, 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைத்து பொது மக்களுக்கும் இலவச கோவிட் பூஸ்டர் டோஸ்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏராளமான சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு முகாம்கள் நமது இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு நினைவாக 75 நாட்கள் நடைபெறுகிறது.என் அன்பான சகோதர, சகோதரிகளே, நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.