மாணவி உயிரிழந்த விவகாரம் - கீழச்சேரி பள்ளிக்கு புறப்பட்டார் அன்பில் மகேஷ்

 
anbil magesh

கீழச்சேரி பள்ளியில் மாணவி  தற்கொலை செய்து கொண்ட நிலையில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சம்பவ இடத்துக்கு புறப்பட்டுள்ளார். 

tn

திருவள்ளூர் மாவட்டம்  திருத்தணி தெக்கலூர் காலனியை சேர்ந்த மாணவி கீழச்சேரியில் இயங்கி வரும்  சாக்ரீட் ஹார்ட்  அரசு நிதி உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி   12ஆம் வகுப்பு படித்து வந்த   மாணவி இன்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  அத்துடன் கீழச்சேரி தனியார் பள்ளி விடுதியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில்  தனியார் பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா ,காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. கல்யாண் உள்ளிட்ட நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மாணவி  இறப்பு குறித்து பள்ளி நிர்வாகம் முறையான தகவல் அளிக்கவில்லை என்று கூறி  மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பாதுகாப்புக் கருதி அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

Anbil Magesh

 இந்நிலையில் திருவள்ளூர்  கீழச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா  மொழி அங்கு புறப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளிக்கு செல்லும் நேரில் விசாரணை நடத்துவதுடன், உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவார் என்று தெரிகிறது.