நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெறும் - இபிஎஸ் பேச்சு

 
eps

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

நாமக்கல்லில் உள்ள பொம்மைக்குட்டைமேட்டில் அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கூட்டத்தில் பங்கேற்ற இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி பொது மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- அதிமுகவை முடக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறவில்லை. அதிமுகவில் பி டீம் ஒன்றை உருவாக்கி பிளவை ஏற்படுத்தி திமுக நினைக்கிறது. அதிமுக உடையவில்லை ஒன்றாக இருக்கிறது என்பதை நாமக்கல் பொதுக்கூட்டம் காட்டுகிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவிடு பொடியாக்கி மீண்டும் ஆட்சியமைப்போம். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெறும். அரசியல் ரீதியாக நம்மை எதிர்கொள்ள முடியாத திமுக கொல்லைப்புறமாக வந்து செயல்படுகிறது. பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான், இணைப்புக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது"