ஆளுநர் ரவியுடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்திப்பு

 
rn

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று பகல் 12.  45 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசுகிறார்.

a

 எடப்பாடி பழனிச்சாமி உடன் கே .பி. முனுசாமி,  தங்கமணி,  வேலுமணி ,ஜெயக்குமார் , சி.வி. சண்முகம் உள்ளிட்ட கட்சியின் மொத்த நிர்வாகிகள் உடன் செல்கின்றனர். இன்று சந்திப்பின்போது தமிழக அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள்,  அது தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் தெரிவிக்க இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க அழைத்தபோது அந்த சந்திப்பினை நிராகரித்துள்ளார் எடப்பாடி.   நேரில் சென்றால் ஓபிஎஸ் மற்றும் தினகரனும் இணைந்து செயல்பட வலியுறுத்துவார் அமித்ஷா.  அந்த சங்கடத்தை தவிர்க்கவே அழைப்பை நிராகரித்துள்ளார்.  இந்த நிலையில் அவர் இன்று ஆளுநரை சந்திக்கிறார்.