அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு..

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 112 அதிகரித்துள்ளது. 


தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மற்றும்  தங்கம் வாங்கும்  மாநிலங்களில்  தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தங்கம் மூதலீட்டின் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் சூழலில் அதன் விலை எப்போதுமே சற்று தடுமாற வைக்கும். அதிலும்,  கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி  மத்திய அரசு  தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்திய பிறகு  தங்கத்தின் விலை தாறுமாறான  ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.  ஆனால்  இம்மாத தொடக்கத்தில் ( செப்) இருந்தே  தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில்,  கடந்த வாரம் சற்று ஏற்றுத்துடன் விற்பனையானது.  

தங்கம் விலை

இந்த வாரம்  சரிவுடனேயே தொடங்கிய தங்கம் விலை,  நேற்று முன்தினம் 168 ரூபாயும்,  குறிப்பாக நேற்றைய தினம்  அதிரடியாக சவரனுக்கு ரூ. 432 குறைந்தது.   அதன்படி நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம்  ஒரு சவரன் ரூ. 37,008 க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்றைய தினம்  தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்திருக்கிறது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

அதாவது சென்னையில் இன்று   22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 112 அதிகரித்து  , ஒரு சவரன்  ரூ.37,120-க்கு விற்பனையாகிறது. அதேபோல்  கிராமுக்கு ரூ. 14 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம்   ரூ.4,626-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது.   சென்னையில் நேற்று ரூ. 61.60 க்கு விற்பனையான  ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் அதிகரித்து ரூ. 62க்கு  விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு  கிலோ வெள்ளி 62,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.