வரலாற்று ஆவணங்கள் வைத்திருக்கிறீர்களா?? அப்போ உடனே இதை செய்யுங்க - சென்னை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..

 
வரலாற்று ஆவணங்கள் வைத்திருக்கிறீர்களா?? அப்போ உடனே இதை செய்யுங்க - சென்னை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..

 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை வைத்திருக்கும் தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்கள்  அதுகுறித்த தகவலை தெரிவிக்க வேண்டும்  என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று ஆவணங்கள் நமது தேசிய பாரம்பரியத்தை எடுத்து கூறுவதாக உள்ளதால், இவற்றினை தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம் பாதுகாக்க திட்டமிட்டு உள்ளது. அவற்றினை, முறையாக சரிசெய்து கணினிமயமாக்குவதன் வாயிலாக நம் கலாசாரம் மற்றும் பராம்பாரியத்தின் அடிச்சுவடு மாறாமல் பாதுகாத்திட இயலும்.

வரலாற்று ஆவணங்கள் வைத்திருக்கிறீர்களா?? அப்போ உடனே இதை செய்யுங்க - சென்னை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..

சென்னை மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், மடங்கள், சர்ச், மசூதி மற்றும் தனியார் நிறுவனங்கள், தனி நபர்களிடம் இருந்தால், அதன் விவரத்தினை 044 - 25228025 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். அல்லது collrchn@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம்” என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.