தமிழகத்தில் மின் கட்டண உயர்வு - தினகரன் கடும் கண்டனம்!!

 
ttv dhinakaran

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

eb

தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மின் கட்டண உயர்வு தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் மின் அமைச்சகத்தால் மாநிலத்திற்கு கூடுதல் கடன் வாங்குவதற்கான கட்டண திருத்தத்துடன் மின்துறை சீர்திருத்தங்களின் கட்டாயம் நிபந்தனை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வரும் மின் கட்டணமானது உயர்கிறது. இதற்கு தற்போது அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

EB

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.  பெயரளவுக்கு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்திவிட்டு, அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்காமல் இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



 ஒவ்வொரு குடும்பங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். வீட்டு வாடகை, கடை வாடகை போன்றவை உயர்வதற்கும், ஏற்கனவே நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவதற்குமே மின் கட்டண உயர்வு வழிவகுக்கும். மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால் தி.மு.க அரசுக்கு இதெல்லாம் புரிந்திருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.