ரசிகர் மரணம்.. நடிகர் அஜித் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்க - சு.ஆ.பொன்னுசாமி வலியுறுத்தல்..

 
ரசிகர் மரணம்.. நடிகர் அஜித் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்க  -  சு.ஆ.பொன்னுசாமி வலியுறுத்தல்..

நடிகர் அஜீத்குமார் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சு.ஆ.பொன்னுசாமி (நிறுவனத் தலைவர்) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்

இதுகுறித்து அச்சங்கத்தி நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் அஜீத்குமார் அவர்களின் நடிப்பில் இன்று (11.01.2023) வெளிவந்துள்ள, “துணிவு” திரைப்பட வெளியீட்டினை சென்னை, கோயம்பேடு, ரோகிணி திரையரங்கில் அதிகாலை வேளையில் ரசிகர்கள் கொண்டாடிய போது சாலையில் சென்ற லாரியில் ஏறி நடனமாடிய பரத்குமார் என்கிற 19வயது ரசிகர் ஒருவர் கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடம் உடைந்து நிகழ்விடத்திலேயே பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.

ரசிகர் மரணம்.. நடிகர் அஜித் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்க  -  சு.ஆ.பொன்னுசாமி வலியுறுத்தல்..

ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டதாக கூறி தொடர்ந்து ரசிகர்களை புறக்கணித்து,  அவர்களை நல்வழிப்படுத்த தவறும் நடிகர் அஜித்குமார் அவர்களின் பொறுப்பற்ற தன்மைக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, திரைப்படத்தில் நடித்து கோடி, கோடியாய் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கும் அவர் மீது தமிழக அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மரணமடைந்த ரசிகரின் குடும்பத்திற்கு அஜித்குமார் அவர்கள் ஒருகோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு, தனது பொறுப்பற்ற தன்மைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.