முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

 
mks-talin-4

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. 

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டசபையில் இன்று முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரபலமானோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில், தமிழறிஞர் க.நெடுஞ்செழியன், திரைப்பட வசன கர்த்தா ஆரூர்தாஸ், அவ்வை நடராஜன், ஓவியர் மற்றும் எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் மஸ்தான், பிரபல கால்பந்தாட்ட வீரர் பீலே, காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா ஆகியோரின் மறைவு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவுக்கு சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.

 இதனையடுத்து சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற கூட்டத்தொடர் விவாதிக்க வேண்டிய மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.