#Breaking ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி

 
premalatha

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட போவதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

tn

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.  சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச்செயலாளர் சுதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

tn

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.அத்துடன் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் போட்டியிடுவார் என அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா உயிரிழந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு  வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தலில் நடத்தப்படுகிறது . இதில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது.  இத்தொகுதியில் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தை ஈ விகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.