இடைத்தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன? - தேமுதிக, மநீம இன்று ஆலோசனை

 
MNM and DMDK

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளன. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. இதேபோல் கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிடுவதால ஜி.கே.வாசன் அறிவித்தார். அதிமுகவை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.  இந்த தேர்தலில் போட்டியிட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை காங்கிரசார் வற்புறுத்தி வந்த நிலையில், அவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

Erode East

இதனிடையே தேர்தலில் போட்டியிடவும் இல்லை யாருக்கும் ஆதரவும் இல்லை என பாமாக அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியோ, எங்கள் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்று சீமான் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தேர்தலில் கமல்ஹாசனின் மநீம கட்சியும், விஜயகாந்தின் தேமுதிக கட்சியும் போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. முன்னனி கட்சிகளிடையே பெரும் போட்டி நிலவி வரும் சூழலில், தேர்தலில் போட்டியிடுவது குறித்து இரு கட்சிகளும் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.