துணிவில்லாத அமைச்சர்... விளாசும் பா.ரஞ்சித்

 
pa

 புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.   இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து முதற்கட்டமாக ஏழு பேருக்கு சம்பன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இந்த சம்பவம் தொடர்பாக 70 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன . சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆகியும் குடிதண்ணீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற ஆதங்கம் பொதுமக்களிடம்

wa இருக்கிறது.

 இறையூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதற்கு பதில் அளித்த முதல்வர் மு. க .ஸ்டாலின் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். 

 இந்த விவகாரத்தில் மக்களை சந்திக்க ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் துணிவில்லாமல் இருக்கிறார் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார் திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித்.

தொடரூம் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள் என்று தெரிவித்திருக்கிறார் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித்.

அவர் மேலும்,  வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.