#BREAKING துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட காவலர் உயிரிழப்பு!!
ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் காரணமாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட காவலர் இன்று உயிரிழந்துள்ளார்.
கோவையில் ஆயுதப்படை காவலர் நேற்று துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு படுகாயம் அடைந்தார். ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்த நிலையில், விரக்தி காரணமாக தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்தது. கோவை பொருட்காட்சியில் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் காளிமுத்து துப்பாக்கியால் தனது வயிற்றில் சுட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், ரத்த வெள்ளத்தில் உடனடியாக அவர் மீட்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கோவையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட ஆயுதப்படை காவலர் காளிமுத்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடனாளி ஆன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார் என காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.