ஆளுநர் செயலுக்கு எதிர்ப்பு - காங்கிரஸ் சட்டப்பேரவையில் நாளை தனி தீர்மானம்

 
tn

ஆளுநர் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  காங்கிரஸ்,  சட்டப்பேரவையில் நாளை தனி தீர்மானம் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn

நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முதல் தொடங்கியது.  முதல் நாளான நேற்று ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கப்பட்ட நிலையில் கூட்டம் முடிவதற்குள் சர்ச்சை வெடித்தது. தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையை முழுமையாக வாசிக்காத ஆளுநர் திராவிட மாடல் என்ற வார்த்தையையும்,  பெரியார், அண்ணா ,கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிடாமல் அந்த பத்தியை முற்றிலுமாக தவித்தார்.  இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட நிலையில் , ஆளுநர் அச்சிடப்படாத வாசகங்களை வாசித்தது எதுவும் அவை குறிப்பில் இடம்பெறாது என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இதன் காரணமாக ஆளுநர் ரவி கூட்டத்தொடர் முடிவதற்குள் பாதியிலேயே வெளியேறினார். இந்த விவகாரம் நேற்று தமிழக முழுவதும் பெரும் பேசும் பொருளானது.

tn

இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக தனி நபர் தீர்மானம் நாளை கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு ஆளுநர் சட்டப்பேரவையில் நடந்து கொண்ட அநாகரிக செயலை கண்டித்து ஆளுநருக்கு எதிரான காங்கிரஸின் தனி நபர் தீர்மானத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளோம்.  ஒன்றிய அரசில் மோடி செய்வதை தமிழ்நாட்டில் அவரது வாரிசாக ரவி செய்து வருகிறார்.  தேசிய கீதம் இசைக்கப்பட்டு பேரவை முடியும் முன்பே பாதையில் வெளியேறி பேரவை வரலாற்றில் இல்லாத மோசமான கலாச்சாரத்தை அவர் கொண்டு வந்துள்ளார் என்று  செல்வ பெருந்தகை கூறியுள்ளார்.