6 முதல் 12ம் வகுப்பு வரை பருவத்தேர்வு நடத்துக. - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..

 
student exam with mask

6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பருவத்தேர்வுகள் நடத்துமாறு  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆக. 13-15 வரை வீடுகளில் தேசிய கொடியேற்ற பிரதமர் அழைப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த மாதம் தான் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை   மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் ஒருபுறம் இருந்தாலும்,  மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று பாடங்களை படித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக  பருவத்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில்  இந்த ஆண்டு  6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடத்த பள்ளிக்  கல்வித்துறை உத்தரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்வு

அதன்படி, 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் 12-ம் தேதி வரையிலும் முதல் பருவத் தேர்வுகள் நடைபெறும் என்றும் , 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4 முதல் 12-ம் தேதி வரையும்  முதல் பருவத் தேர்வுகள்  நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.