எச்சில் துப்பி, அடித்து அசிங்கப்படுத்துவதுடன் திருட்டு பட்டம் கட்டுவதாக நடிகை பார்வதி நாயர் மீது புகார்

 
parvathi

தன் மீது எச்சில் துப்பி, அடித்து அசிங்கப்படுத்தி திருட்டு பட்டம் கட்டுவதாக நடிகை பார்வதி நாயர் மீது அவர் வீட்டு பணியாளராக வேலை பார்த்த உதவி இயக்குனர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Parvathy Nair Wiki, Hd Images, Boyfriend, Affairs,Today Updates, Gallery,  News

கடந்த அக்டோபர் மாதம் 20-ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயர் வீட்டில் இருந்து ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை வீட்டில் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் திருடி சென்று விட்டதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் அளித்திருந்தார். 

இந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்து வந்ததாகவும் தன்னை பார்வதி நாயர் அடித்து துன்புறுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் மேலும் தன் மீது அபாண்டமான திருட்டு பட்டம் சுமத்துவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.


இரவு நேரங்களில் நடிகை பார்வதி நாயர் ஆண் நண்பர்களுடன்  மது விருந்து நடத்திய போது தான் பார்த்ததால் பார்வதி நாயருக்கு தன் மீது கோபம் ஏற்பட்டதாகவும் அதனால் தான் வெளியில் சொல்ல வாய்ப்பு இருப்பதாக கூறி தன்னை அன்று முதலே அநாகரிகமாக நடத்தி வந்ததாகவும் சுபாஷ் சந்திரபோஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.