ஓபிஎஸ் சகோதரர் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்

 
op

ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா மீது தேனியில் நில அபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாக்கு வியாபாரி புகார் அளித்துள்ளார். 

Bereft of support, OPS asks police not to allow AIADMK General Council |  Deccan Herald

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் முனியாண்டி (59). சாக்கு வியாபாரியான இவர் தனது மனைவி பெயரில் உள்ள நிலத்தை அபகரித்துக் கொண்டதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக ஓ.பி.எஸ்-ன் சகோதரரும், தேனி ஆவின் தலைவருமான ஓ.ராஜா மீது இன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட  வில்பட்டி கிராமத்தில் தனது மனைவி சந்தானலட்சுமியின் பெயரில் 1ஏக்கர் 83சென்ட் நிலம் உள்ளது.‌ அதனை எனது மகளின் திருமணத்திற்காகவும், குடும்ப தேவைக்காகவும் விற்க முடிவு செய்த நிலையில், கடந்த 2010 ஆண்டு ஓ.பி.எஸ் சகோதரர்,  ஓ.ராஜா கிரயம் செய்து கொள்வதாக பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் மூலம் தொடர்பு கொண்டனர். பின்னர் நிலத்தை ரூபாய் 40 லட்சத்திற்கு கிரையம் பேசி அதற்கான பணத்தை 3மாதத்தில் கொடுப்பதாக தெரிவித்தனர். அதனை உண்மை என நம்பி கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதியன்று ஓ.ராஜாவின் உறவினரும், அவரது பினாமியுமான பெரியகுளம் பேச்சிமுத்து பெயருக்கு பொது அதிகாரம் என்றழைக்கப்படும் பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தோம்.
   

ஆனால் பேசியபடி பணத்தை தராமலும், நாங்கள் எழுதிக் கொடுத்த பவர் பத்திரத்தை வைத்து பெரியகுளம் தென்கரையை சேர்ந்த விஜயகுமார் என்பவரது பெயருக்கு பெயரளவில் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்.‌  இதையடுத்து நாங்கள் எழுதிக் கொடுத்த பவர் பத்திரத்தை ரத்து செய்து தாருங்கள் அல்லது எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் ரூபாய் 40லட்சத்தை தருமாறு கேட்டதற்கு,  தரமறுத்த ஓ.ராஜா கொலை மிரட்டல் விடுத்தார்.‌ அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து  கடந்த 2011ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சரின் தனிப்பயிற்சி விற்கும்  புகார் மனு அளித்திருந்தோம். ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டும், ஓ.பி‌.எஸ் மற்றும் ஓ.ராஜாவின் அரசியல் செல்வாக்கால் கடந்த 10ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மோசடி செய்து அபகரிக்கப்பட்ட எங்கள் நிலத்தை மீட்டுத்தருமாறும், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கின்ற ஓ.ராஜா, பேச்சிமுத்து, விஜயகுமார் ஆகிய 3 பேர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.