தமிழ்நாட்டில் தண்டோரா போடுவதற்கு தடை - ஆட்சியர்களுக்கு உத்தரவு..
தமிழகத்தில் தண்டோரா போட தடை விதித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதைச் சமூக ஆர்வலகள் சுட்டிக்காட்டி வேதனைபடுவதையும் கண்டேன். அறிவியல் வளர்ந்துவிட்டது. தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் தண்டோரா போடுவது, இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை..
ஒளிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வரச் செய்வதன் மூலம், மூலை முடுக்குகளில் எல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும். எனவே தண்டோரா போடக் கடுமையாக தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி உள்ளாட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.