தஞ்சாவூர் அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

 
rape

தஞ்சாவூர் அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Meerut: Gangrape of a BJP Mahila Morcha leader, one Abdullah and his  friends booked

தஞ்சை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது இளம் பெண். இவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல பணி முடித்து விட்டு தனது சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருக்கும்போது, அவரை வழிமறித்த, அப்பெண்னுடன் படித்த பெண்ணின் பக்கத்து ஊரான மேட்டுபட்டியை சேர்ந்த கொடிஅரசன் என்ற இளைஞர் அப்பெண்ணை வீட்டில் விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். ஆனால் வீட்டிற்கு அழைத்து செல்லாமல், அருகில் உள்ள காட்டு பகுதி அழைத்து சென்று தனது நண்பர்களுடன் கூட்டு  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து பெண் தெரிவிக்காத போது, நேற்றிரவு பெண்ணின் உறவினருக்கு இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கொடிஅரசன், தமிழரசன், சுகுமாரன், கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.