குழந்தைகள் தினம் : ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து...

 
 குழந்தைகள் தினம் : ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து...

 குழந்தைகள் தினத்தையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்..  

 ராமதாஸ்..

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “குழந்தைகள் தான் பல தருணங்களில் நமக்கு பெற்றோர்கள்.  அவர்கள் தான் மகிழ்ச்சியின் ஊற்றுகள். அவர்களின் தழுவல்கள் தான் நமது மனக்காயங்களை போக்கும் மருந்துகள். என்னைச் சுற்றி குழந்தைகள் இருந்தால் நானே குழந்தையாகி விடுவேன். அவர்களை  இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும் கொண்டாடுவோம்!” என்று பதிவிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

இதேபோல், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,. “குழந்தைகள் மீது பேரன்பு காட்டிய பெருந்தகை ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் நாள். குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள். கள்ளங்கபடமற்ற உள்ளங்களுக்கு சொந்தக்காரர்கள். இன்றும், என்றும் அவர்களை போற்றுவதுடன், அவர்களைப் போல உளத்தூய்மையுடனும், கவலையின்றியும் வாழ முயல்வோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்..