புகழ்மாலைகள் குவியட்டும் -எழுத்தாளர் இமையத்திற்கு முதல்வர் வாழ்த்து
கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.
திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் தொடர்ச்சியான இமையம் நடைபோடும் பாதையில் புகழ்மாலைகள் பல குவியட்டும்! என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.
— M.K.Stalin (@mkstalin) November 25, 2022
திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் தொடர்ச்சியான @writerimayam நடைபோடும் பாதையில் புகழ்மாலைகள் பல குவியட்டும்! pic.twitter.com/AWKGlrmVz5
திட்டக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் இமையம். அண்ணாமலை என்ற இயற்பெயர் உடைய இவர் இமையம் என்ற பெயரில் படைப்புகளை எழுதியுள்ளார். 2020 ஆம் ஆண்டில் செல்லாத பணம் என்ற படைப்பில் இவர் சாகித்திய அகாடமி விருது பெற்றிருக்கிறார். குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் விருது 2022க்கு எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த விருதை பெரும் முதல் தமிழ் எழுத்தாளர் இமயம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதானது வெள்ளிப் பதக்கமும் ஐந்து லட்சம் ரூபாய் பணம் முடிப்பும் கொண்டது ஆகும் .
நவீன கன்னட இலக்கியத்தில் ஆகப்பெறும் ஆளுமை குவெம்பு என்னும் கேவி புட்டப்பா. மைசூர் பல்கலை முன்னாள் துணைவேந்தர். ஞானபீட விருது பத்ம விருதுகளான பூசன் விருதுகளை பெற்றவர். அவர் பெயரில் சிமோகாவில் பல்கலைக்கழகம் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த கவிஞர் குவெம்பு நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கன்னட தேசிய குவெம்பு விருது இந்த ஆண்டு எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.