பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் - மதுரையில் மரியாதை செலுத்துகிறார் முதல்வர்

 
ttn

அண்ணா பிறந்தநாளன்று  மதுரை நெல்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அண்ணா  சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை  அணிவித்து மரியாதை செய்கிறார். 

arivalayam

இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காஞ்சி தந்த காவியத் தலைவர் - உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர் - தமிழ் மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ் நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர் - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் - "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன் .

stalin

"மெட்ராஸ் ஸ்டேட்” என்ற பெயரை "தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப் பெரும் தனயன் - சுயமரியாதை சுடரொளி - சொக்க வைக்கும் சொற்பொழிவாளர் - எழுத்து வேந்தர் - தென்னகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர் - பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 114வது ஆண்டு பிறந்த நாளான 15.9.2022 அன்று காலை 8.00 மணி அளவில் மதுரை, கீழவெளி வீதி - மேலவெளி வீதி சந்திப்பு, நெல்பேட்டை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்." என்று தெரிவித்துள்ளது.