பிரதமருக்கு பொன்னியின் செல்வன் நாவல் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

 
mk

பிரதமர் மோடிக்கு பொன்னியின் செல்வன் நாவலின் ஆங்கில பதிப்பான ஐந்து பாகங்களை வழங்கினார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.

 திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.   இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி விமான மூலம் இன்று பிற்பகல்  மதுரை வந்தார்.   மதுரையில் பாஜகவினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.  அதன் பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக அவர் காந்திகிராமம் சென்றார். காந்தி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் இறங்கினார்.

mo

திண்டுக்கல்லில் பிரதமரை நேரில் வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்,  பிரதமருக்கு  கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்களைக் கொண்ட ஆங்கில பதிப்பு புத்தகத்தை வழங்கினார்.  

சோழர்களின் ஆட்சி முறையும், அவர்களின் ஆட்சி காலம் பற்றியும், ராஜராஜ சோழனின் பெருமையும் பேசும் பொன்னியின் செல்வன் நாவலை பிரதமருக்கு  வழங்கினார்.  இந்த நாவல் தற்போது திரைப்படமாக வெளிவந்து உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

வரவேற்புக்கு  பின்னர் காந்தி கிராமத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் பிரதமர் மோடி . முதல்வர் மு .க. ஸ்டாலின்,  ஆளுநர் ஆர்.என். ரவி,  மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிந்து ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் செல்வதாக திட்டம்.   ஆனால், வானிலை சரியாக இல்லாததால் திட்டமிட்டு இருந்தபடி அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்யாமல் சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார்.