முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் ? வெளியான முக்கிய தகவல்!
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பிற்பகல் வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு இருந்ததன் காரணமாக அவர் கடந்த 14ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா அறிகுறியினால் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
அத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருகிறார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர், அங்கேயே தங்கி ஓய்வு பெற்று வந்தார்.
இந்நிலையில் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் இன்று பிற்பகல் காவிரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஸ்டாலின் இன்று வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. நாளை தமிழ்நாடு நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ள நிலையில் , முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேருரையாற்றவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இதன் காரணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிகிறது.