190 விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். .

 
மு.க.ஸ்டாலின்

தேசிய  மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.4.85 கோடி உயரிய ஊக்கத்தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “சென்னை, கலைவாணர் அரங்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில்  தேசிய  மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரக்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.  இந்த ஆண்டு, கொலம்பியாவில் நடைபெற்ற  20 வயதிற்குட்பட்டோருக்கான  உலக தடகள வாகையர் போட்டியில், டிரிப்பிள் ஜம்ப் பிரிவில் (Triple Jump) வெள்ளிப்பதக்கம் வென்ற டி. செல்வபிரபு, 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஒட்டப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பரத் ஸ்ரீதர் ஆகியோருக்கு தலா ரூ.  4 இலட்சத்திற்கான காசோலைகள்;

விளையாட்டு வீரர்கள் - முதல்வர் ஸ்டாலின்

இந்தோனேசியா நாட்டின் ஜகார்தாவில்  நடைபெற்ற ஆசிய கோப்பை வளைகோல்பந்து  வாகையர் போட்டியில் (ASIA CUP HOCKEY CHAMPIONSHIP-2022) வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் எஸ். மாரீஸ்வரன் மற்றும் எஸ். கார்த்தி ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகள் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு நாட்டின் சார்ஜாவில்  நடைபெற்ற உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அளவிலான விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் தடகளப் போட்டிகளில் 2 தங்கப்பதக்கங்கள் வென்ற ஆர். பாலசுப்பிரமணியன்  ரூ. 10 இலட்சம் , ஈட்டி எறிதல்  போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற  ஏ. செல்வராஜ்  ரூ. 5 லட்சம் ,

விளையாட்டு வீரர்கள் - முதல்வர் ஸ்டாலின்

குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல்  போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற ஜி. விஜயசாரதி ரூ. 4  லட்சம்  காசோலை, ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல்  போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற கே. கணேசன்   ரூ. 4 இலட்சம்; குண்டு எறிதல்  போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற எஸ். மனோஜ் ரூ. 2 இலட்சத்திற்கான காசோலை, இறகுப்பந்து ஒற்றையர் பிரிவு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற எஸ். சிவராஜன் 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலை;

விளையாட்டு வீரர்கள் - முதல்வர் ஸ்டாலின்

குஜராத்தில் 29.9.2022 முதல் 12.10.2022 வரை  நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் (36th NATONAL GAMES 2022)  வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 68 விளையாட்டு வீரர்கள் மற்றும் 112 விளையாட்டு வீராங்கனைகள், என 180 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 4 கோடியே 29 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்; என தேசிய  மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு  4 கோடியே 85 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்  இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்றுவரை 1433 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.90 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.