அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை!!

 
rain

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தமிழகத்தில்  கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக  இன்றும், நாளையும் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அத்துடன் இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும்  வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

rain

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரத்தில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.