தரணியெங்கும் வாழும் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் - எல்.முருகன்

 
L Murugan

தமிழக மக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அறுவடை திருநாளான பொங்கல் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும், உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இன்று தை முதல் நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, கரும்பு, மஞ்சள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை சூரியனுக்கு படைத்து பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பொங்கி வரும் போது "பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்" என கூறி மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.  தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், தமிழக மக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  எல்.முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, உழைப்பின் உன்னதத்தை உயர்த்தி, வேற்றுமைகளைக் கடந்து இயற்கையை போற்றும் தமிழர் திருநாளில் தரணியெங்கும் வாழும் அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் அன்பு நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.