திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் மீதான வழக்குகள் ரத்து

 
ttn

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்குகளை  ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Madras Court
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.  கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் தனியார் நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.குரோம்பேட்டையில் குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிண்டன் தாசன் என்பவர் புகார் அளித்தார்.

ttn

 இந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்திருந்தது.  அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகத்ரட்சகன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் ஜெகத்ரட்சகன் தாக்கல் மனுவை ஏற்றுக் கொண்டு அவர் மீதான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.