100-வது பிறந்த நாள் - தாய்மாமாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
mk stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தாய்மாமாவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, நலம் விசாரித்தார். 

டெல்டா மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தில் கீழ் பூவாணிகுப்பம் பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த புகைப்படங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். கனமழையினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் ,  நடவடிக்கைகள் வெள்ளத்தடுப்பு திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டார்.  பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நிவாரண உதவிகள் வழங்கினார்.  கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். சீர்காழி பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, அரிசி, மளிகைபொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வழங்கினார். 

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது தாய்மாமாவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, நலம் விசாரித்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கோவில் திருமாளம் பகுதியில் தாய்மாமா தெட்சிணாமூர்த்தியை நேரில் சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரிடம் ஆசி பெற்றார்.