ஓட்டலுக்குள் புகுந்த அரசு பேருந்து- இருவர் உடல் நசுங்கி பலி

 
விபத்து

நத்தம் அருகே அரசு பஸ் ஓட்டலுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் -கோவில்பட்டியை  சேர்ந்தவர் தேவராஜ்(61). இவர் புளிக்கடை ஸ்டாப் அருகில் தனது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது நத்தத்திலிருந்து மதுரை நோக்கிச்சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது. இதில் ஓட்டல் வாசலில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த தேவராஜ் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நத்தம் போலீசார் இறந்தவர்களின் பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்து பயணம் செய்த பத்துக்கு மேற்பட்டோர் சிறிய காயங்கள் ஏற்பட்டு இவர்கள் அனைவரும் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்  இது தொடர்பாக தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இச்சம்பவத்தால் நத்தம்- மதுரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.