சொத்துக்காக அக்காவை வெட்டிக்கொலை செய்த தம்பி!

 
murder

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சொத்து தகராறு காரணமாக உடன் பிறந்த அக்காவை தம்பியே வெட்டிக்கொலை செய்தார். கொலை செய்துவிட்டு ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் தம்பி சரணடைந்தார். 

murder News, photos and videos, murder हिंदी न्यूज़ | page-1

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி நாதபுரம் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). இவர் மில் தொழிலாளி. இவரது உடன்பிறந்த அக்காள் பாஞ்சாலி (வயது 60). இவர் அழகாபுரி பகுதியில் வசித்து வருகிறார். பாஞ்சாலி சஞ்சீவிநாதபுரம் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு வரும்போது சொத்து தகராறு காரணமாக ரமேஷ் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். இன்று மதியம் 12 மணி அளவில் தம்பி வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து பின்னர் தம்பி வீட்டில் வந்து பாஞ்சாலி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால் கடும் கோபத்தில் இருந்த தம்பி ரமேஷ் பரணில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து அக்காவை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். உடனே ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் ரமேஷ் சரணடைந்தார். தகவல் கிடைத்தவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் , ராஜபாளையம் வடக்கு காவல் ஆய்வாளர் ராஜா உள்ளிட்டோர் விரைந்து சென்று பாஞ்சாலி பிரேதத்தை ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்து தகராறு காரணமாக உடன் பிறந்த அக்காவை பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து வெட்டிய தம்பியின் செயல் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.